ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் விக்னேஷ் சிவனின் புதிய படத்தை அவரது காதலியான நயன்தாரா தயாரிக்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது. அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்தே இப்படியொரு தகவல் வெளியாகி இருப்பதுதான் ஆச்சர்யம். இந்த செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த செய்தி மீடியாவுக்கு அறிவிக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.
நானும் ரௌடிதான் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. அந்தப்படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. லேட்டஸ்ட் தகவலின்படி, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லையாம். அதில் கதையின் நாயகனாக நடிக்க தற்போது சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும், 15 கோடி அட்வான்ஸாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியாக சொல்கின்றனர்.
தற்போது, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ரெமோ மற்றும் மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரேநேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்க பெரிய தொகை தேவைப்பட்டதால் நயன்தாராவின் படத்தை ஒப்புக்கொண்டுவிட்டார் என்று சொல்கிறார்கள். விக்னேஷ் சிவனுடன் சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் நயன்தாராவே கதாநாயகியாக நடிக்கிறார்.