ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமா தனது வியாபார எல்லையை விரிவுபடுத்தவேண்டும் என்றால் மலையாள நடிகர்கள், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வேண்டும். மற்ற மொழி நடிகர்களையும் மலையாளப்படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற கொள்கை கொண்டவர் மோகன்லால். அதனால் தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளில் நல்ல அழைப்பு தேடிவரும்போது தட்டாமல் ஏற்றுக்கொள்கிறார். அப்படி கடந்தவருடம் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்த 'மைத்ரி' என்ற கன்னட படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் மோகன்லால்.
இந்தப்படத்தில் அவருக்கு விஞ்ஞானி கதாபாத்திரம். கிரிராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க, முக்கிய வேடத்தில் அது குல்கர்னி நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்துள்ளவர் நம்ம இசைஞானி இளையராஜா. தற்போது கர்நாடக அரசு கடந்த வருடத்துக்கான சினிமா விருதுகளை அறிவித்துள்ளது. இதில் மூன்றாவது சிறந்த படமாக 'மைத்ரி' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணியும் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.