ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றை மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இந்தப் படம் மூலம் மலையாள முன்னணி ஹீரோவான ஃபகத் பாசில் தமிழில் அறிமுகமாகிறார். ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஃபகத் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தின் கதை விவாதக் கூட்டம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் இப்படியான கூட்டத்தில் கலந்து கொள்ளும் நடைமுறையை சமீப காலத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் படப்பிடிப்பின் போது நடிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதுதான் காரணம். இந்தக் கூட்டத்தில் ஃபகத் வந்து கலந்து கொண்டு தன் கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் புரிந்து கொண்டாராம்.
'தனி ஒருவன்' படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் மோகன்ராஜா அடுத்து விஜய், அஜித், சூர்யா போன்றவர்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவர் சிவகார்த்திகேயனை இயக்க சம்மதம் தெரிவித்தார். அடுத்து அந்தப் படத்தில் நயன்தாரா நாயகி என்றதும் படம் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றதும் இன்னும் எதிர்பார்ப்பு கூடியது.
ஃபகத் பாசிலை நடிக்க வைப்பதன் மூலம் மலையாளக் கரையோரமும் தன்னுடைய காலை ஆழமாக ஊன்றவே சிவகார்த்திகேயன் ஃபகத்தை நடிக்க அழைத்திருக்கிறார் என்கிறார்கள். விஜய் ஸ்டைலை தன் படங்களில் ஃபாலோ செய்யும் சிவகார்த்திகேயன் விஜய்யைப் போலவே கேரளாவிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். அதனால்தான் ஃபகத் பாசில் மலையாளத்தில் வாங்கும் சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் பேசி தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்களாம்.