ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
என்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; என் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நடிகர் சூர்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மலேஷியா தமிழ் பத்திரிகையில், மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா என்ற நிகழ்ச்சியில், நான் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தி, சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இப்படி ஒரு நிகழ்ச்சியை பற்றிய எந்த தகவலும் எனக்குத் தெரியாது; அதில் கலந்து கொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள், ஜாதி, மதம், மொழியை கடந்தவர்கள். நான், மதம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டேன். பணம் வாங்கி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கை உடையவன். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியும் உண்மையில்லை.
மலேஷியாவில் நடைபெறுவதாக சொல்லப்படும் மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழாவிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரை தவறாக பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவது, எனக்கு வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு கொண்ட அனைவரும், இது போன்ற தவறான நோக்கத்தோடு வெளியாகும் செய்திகளை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.