ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
விஜய்-சூர்யா போன்ற நடிகர்கள் ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே, அதற்கடுத்த படத்தை தொடங்கி விடுவார்கள். அவர்கள் அடுத்த படத்தில் பாதி தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் போதுதான் அதற்கு முன்பு நடித்த படம் வெளியாகும். ஆனால், அஜித் அப்படியல்ல. ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்.
குறிப்பாக, பில்லாவுக்கு பிறகு ஏகன், அசல் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராதபோதும், மங்காத்தாவை சூப்பர் ஹிட்டாக கொடுத்தார். பின்னர் பில்லா-2 தோல்விடைந்த நிலையில், அதன்பிறகு ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என ஓரளவுக்கு தொடர் ஹிட்களாக கொடுத்து வரும் அஜித், இதை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், ஒவ்வொரு படங்களுக்கு இடையேயும் இடைவெளி கொடுத்து சரியான கதைகளை தேர்ந்தெடுத்து பொறுமையாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், வேதாளம் படத்தை அடுத்தும் சிவாவின் இயக்கத்தில் நடிப்பவர், அந்த படத்தில் ஜூலை மாதம் முதல் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் சில மாதங்களாக ஓய்வெடுத்ததால், அந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் இருந்து ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிப்போயிருக்கிறது. அந்தவகையில், அஜித்தின் 57வது படம் 2017ல்தான் வெளியாகும் என்கிறார்கள்.