‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான். மிகுந்த நம்பிக்கையுடன் அவர் களமிறங்கியபோதும் தேர்தலில் தோல்வியை தழுவினார். இருப்பினும், ஒரு சினிமாக்காரனாக இருந்து தொடர்ந்து எனது தொகுதி மக்களுக்காக நான் பணியாற்றுவேன் என்கிறார் அவர்.
மேலும் ஜெயங்கொண்டான் கூறுகையில், சினிமாவில் பல படங்களில் பாடல் எழுதியுள்ள நான், தற்போது சென்னை கே.கே.நகரில் கவிஞர் கிச்சன் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறேன். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கிறேன். இன்னும் பெரிய அளவில் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டபோது தான், நான் பிறந்த பூமியான ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நினைத்தேன். அதன்மூலம் அந்த பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் சுயேட்சை வேட்பாளராக மகேஷ் என்ற எனது சொந்த பெயரில் போட்டியிட்டேன். எனக்கு டெலிபோன் சின்னம் தரப்பட்டது.
தேர்தலுக்கு முன்னதாக கடுமையான பிரசாரம் செய்தேன். சொந்த ஊர் என்பதால் நான் சென்ற இடமெல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதோடு நடிகர் கஞ்சா கருப்புவும் எனக்காக 6 நாட்கள் வந்து பிரசாரம் செய்தார். இருப்பினும், தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை. காரணம், அரசியலில் நான் எடுத்து வைத்திருக்கும் முதல்படி இது. இதை நான் வெற்றியாகத்தான் பார்க்கிறேன். அதோடு, மக்கள் ஓட்டுப்போடவில்லை என்பதற்காக நான் அவர்களை மறக்கப்போவதில்லை. விரைவில் ஜெயம்கொண்டம் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கப்போகிறேன். அதுமட்டுமின்றி, தொடர்ந்து அவர்களுக்கு ஒரு சினிமாக்காரனாக இருந்து என்னால் ஆன உதவிகளை செய்து கொண்டேயிருப்பேன் என்கிறார் ஜெயங்கொண்டான்.