ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திரையுலகத்தை சேர்ந்த சிலர் போட்டியிட்டனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் ஆகியோரும், அ.தி.மு.க.வின் சார்பில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, தி.மு.க.வின் சார்பில் நடிகர் வாகை சந்திரசேகர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விஜயகாந்த் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இவர்களில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் தோல்வியடைந்தனர். அவர்களது காலத்தில் பொருளாளராகப் பணியாற்றிய வாகை சந்திரசேகர் சென்னை, புறநகர்ப் பகுதியான வேளச்சேரி தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் இப்போதைய துணைத் தலைவர்களில் ஒருவரான கருணாஸ், திருவாடனை தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை, பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட நடிகை சி.ஆர்.சரஸ்வதி தோல்வியடைந்துள்ளார். ஆக, இந்த சட்டசபை தேர்தலில் வாகை சந்திரசேகர், கருணாஸ் இருவர் மட்டுமே சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸூக்கு நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். “திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கருணாஸூக்கு வாழ்த்துகள். முதல் தேர்தல், இன்னும் போக வேண்டும். உங்கள் தொகுதிக்கு நீங்கள் பல நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்,” என விஷால் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.