வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் தற்போது ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட படம். ஆர்யா முரட்டுத்தனமான மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார். இதற்காக ஆர்யா தனது எடையை 18 கிலோ கூட்டியிருக்கிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கொடைக்கான் அருகில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் நடந்தது. இதற்காக சுமார் 100 ஏக்கரில் ஒரு மலைவாழ் மக்களின் கிராமத்தை ஆர்ட் டைரக்டர் மோகன் அமைத்திருந்தார். சுமார் ஒரு கோடியில் இந்த கிராமம் உருவாக்கப்பட்டதாக தயாரிப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. கொடைக்கானலில் தங்கியிருந்து நடித்த ஆரியா பல நாட்கள் அந்த கிராமத்திலேயே தங்கியிருந்து நடித்துள்ளார்.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் நடக்க உள்ளது. ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட உள்ளது. 20 நாட்கள் வரை தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு, அதன்பிறகு 3வது செட்யூல் படப்பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. ஹாலிவுட் படமான அபோகலிப்டோ பாணியிலான பிரமாண்ட பாரஸ்ட் பேஸ் பிலிம் என்கிறார்கள். சூப்பர்குட் பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.