'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விக்ரம் பிரபு நடித்த வெள்ளக்காரதுரை படத்திற்கு பிறகு எழில் இயக்கும் காமெடி படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. நடிகர் விஷ்ணு தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்கள் தவிர சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். சி.சத்யா இசை அமைக்கிறார், சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற ஜூன் 3ந் தேதி படம் வெளிவருகிறது. இதுவும் ஒரு அரசியல் கலந்த காமெடி படம்.
வெள்ளக்காரனின் கதை சுருக்கம் வருமாறு: கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனின் விசுவாசி டெய்லாரான முருகன். மந்திரி பதவிக்காக ஆசைப்படும் அதே கட்சியின் வேறொரு தொகுதி எம்.எல்.ஏ மருதமுத்து, ஜாக்கெட் ஜானகிராமனை தனக்கு போட்டியாக கருதும் அவர் அவரைத் தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார். அதற்காக சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க ஊர்விட்டு ஊர் வந்து ஹோட்டல் நடத்தும் ராஜாமணி , எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் முருகனுக்கு இருக்கும் செல்வாக்கை கேள்விப்பட்டு தன் மகள் அர்ச்சானாவின் போலிஸ் வேலைக்காக லஞ்சமாக ரூபாய் இருபத்தைந்து லட்சத்தை முருகனிடம் தருகிறார். பணத்தை வாங்கும் முருகன் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தன் மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று நினைக்கிறார் .
அந்த பணத்தை உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் மந்திரியை பார்பதற்காக சென்னைக்கு கிளம்பி கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் கொடுக்கிறார், அவரும் டி.ஜி.பியை நேரில் சந்தித்து வேலையை கச்சிதமாக முடிக்கிறேன் என்று சொல்லிட்டு சென்னைக்கு செல்கிறார். சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது ? மந்திரியையும் டி.ஜி.பியையும் ஜாக்கெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா ? அர்ச்சானவிருக்கு வேலை கிடைத்ததா... இல்லையா? முருகனின் காதல் என்னவாயிற்று என்பது நகைச்சுவை கலந்த மீதிக்கதை. முருகனாக விஷ்ணு விஷால் , அர்ச்சனாவாக நிக்கி கல்ராணி , ஜாக்கெட் ஜானகிராமனாக ரோபோ ஷங்கர், மருதமுத்துவாக நரேன், ராஜாமணியாக ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.