தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உரிய ஆதாரங்களை ஒப்படைத்தும் திருட்டு விசிடிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் தயங்குகிறது என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
கடந்த 3 ஆண்டுகளாக நான் தனி ஆளாக திருட்டு விசிடியை எதிர்த்து வருகிறேன். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எந்த ஆதரவையும் தரவில்லை. சினிமா தொழிலின் வருமானத்தில் 80 சதவிகிதம் திருட்டு விசிடி கும்பலுக்கு போகிறது. 20 சதவிகிதம்தான் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை திருட்டு விசிடி தொழிலில் புழங்குகிறது.
திருட்டு விசிடிக்கு மூல காரணமாக இருப்பது தியேட்டர்கள்தான். கடந்த 10 மாதங்களில் பெங்களூர் பிவிஆர் ஓரியண்ட் தியேட்டரில் 7 படங்கள் திருட்டு விசிடிக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் தெறி, சூர்யா நடித்த 24 படங்களும் இதில் அடங்கும். கியூப் நிறுவனத்திற்கு பணம் கட்டி அதற்கான ஆதாரத்தை பெற்று தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்தோம். அவர்கள் பிவிஆர் சினிமாவிடம் விளக்கம் கேட்டார்கள். இதுவரை அந்த நிறுவனம விளக்கம் அளிக்கவில்லை. ஆனாலும் அந்த தியேட்டருக்கு மீண்டும் மீண்டும் படங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. எனது மருது படமும் அதே தியேட்டரில்தான் திரையிடப்படுகிறது. அதுவும் திருட்டு விசிடி தயாரிக்கப்டும்.
ஒரு நடிகரால் ஒரு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்த நடிகரை உடனடியாக அழைத்து பேசி நஷ்டத்தை பெற்றுத் தருகிறார்கள். இந்த வேத்தை ஏன் தயாரிப்பாளர் சங்கம் திருட்டு விசிடி ஒழிப்பில் காட்டவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி. இனியாவது தீவிர நடவடிக்கை எடுத்து இனி வரப்போகும் படத்தையாவது காப்பாற்ற வேண்டும். நான் தயாரிப்பாளர் சங்க விஷயத்தில் தலையிடுவதாக சொல்கிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர்தான். நான் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது. என்றார். பேட்டியின்போது தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எல்ரெட் குமார், ராஜசேகர், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.