இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர்களுக்கு இடையே காதலர் மலர்வதும், பின்னர் அந்த காதல் முறிவதும், நாங்கள் காதலர்கள் இல்லை, நண்பர்கள் தான் என்று சொல்வதும் வழக்கமான ஒன்று தான். அப்படித்தான் ஹிந்தி நடிகர் உதய் சோப்ராவும், நடிகை நர்கீஸ் உடன் நட்பாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
உதய் சோப்ராவும், நர்கீஸ் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் அடிக்கடி செய்தி வந்தது. இருதினங்களுக்கு முன்னர் இவர்களுக்கு இடையேயான காதல் முறிந்துவிட்டதாகவும் செய்தி வந்தது.
இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக இதுநாள்வரை வாய்திறக்காமல் இருந்த உதய்சோப்ரா இப்போது முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார். தன் டுவிட்டர் பக்கத்தில் உதய் சோப்ரா கூறியிருப்பதாவது... ''பொதுவாக மீடியாக்கள் கிளப்பிவிடும் வதந்திக்கு நான் பதில் சொல்வது கிடையாது. நர்கீஸ் விஷயத்தில் நான் சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நானும், நர்கீஸூம் நல்ல நண்பர்கள். நான் காதலிப்பதாக வந்த செய்தி, அது முறிந்துபோன செய்தி எல்லாம் தவறானவை. மீடியாக்கள் தான் தேவையில்லாமல் எங்களைப்பற்றி கதைகட்டி வருகிறார்கள், அவர்களின் கதைதிறமையை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.