ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் தற்போது இயக்கி வரும் படம் காஷ்மோரா. கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தனது கெட்டப்பை முழுமையாக மாற்றியுள்ளார் கார்த்தி. குறிப்பாக, சரித்திரை கால கெட்டப்பில் அவரது முகத்தை 3டி பேஸ் கேன் டெக்னாலஜியில் மாற்றியிருக்கிறார்களாம். அந்த காட்சி ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்குமாம்.
மேலும், இந்த இரண்டு காலகட்ட கதையில், சரித்திர பின்னணியில் கார்த்தியுடன் நடித்துள்ள நயன்தாராவையும் வித்தியாசமான கோணத்தில்தான் படமாக்கி வருகிறாராம் கோகுல். ஆனால், இந்த படம் கொரியன் படத்தின் தழுவல் என்றாலும்கூட, தமிழுக்காக சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், இப்போதெல்லாம் படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே படங்களின் முக்கிய அம்சங்கள் வெளியாகி விடுவதால் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் நடிகைகளை தவிர மற்றவர்களுக்கு படம் குறித்த எந்த தகவல்களும் சொல்லாமல் ரகசியமாக படமாக்கி வருகிறார்களாம். அதனால் காஷ்மோரா டீமில் இருப்பவர்களிடம் எந்த மாதிரியான படம் என்று கேட்டால், என்ன கதை, என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. எல்லாவற்றையும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.