மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
தனது ஒவ்வொரு படங்களை முடித்ததும் பேமிலியுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது அஜீத்தின் வழக்கம். ஆனால் வேதாளம் படத்தில் நடித்து முடித்த கடைசி நேரத்தில் அவரது காலில் வலி ஏற்பட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜீத். அதையடுத்து கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்து வந்தார். அதோடு, மீண்டும அவர் சிவா இயக்கத்தில் நடிக்கும் 57வது படம் சம்பந்தப்பட்ட கதை விவாதம் உள்ளிட்ட சில ஒப்பந்தங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
தற்போது அப்படம் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில், நேற்று திடுதிப்பென்று தனது குடும்பத்துடன் வெளிநாடு புறப்பட்டு சென்றார் அஜீத். அதற்காக அவர் சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை ஏராளமான ரசிகர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அஜீத்தின் இந்த வெளிநாடு டூர் மே மாதம் ஆரம்பத்திலேயே திட்ட மிடப்பட்டிருந்ததாம். ஆனால் மே 16-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தனது வெளிநாடு டூரை மே 18-ந்தேதிக்கு மாற்றியிருக்கிறார் அஜீத்.