'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
இன்றைய தேதியில், இளம் நடிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் விஷால். நடிகர் சங்கத்தை நாடறிய செய்ததில், இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் தன்னைபுதுப்பித்து கொள்ளும் விஷாலுடன் ஒரு சந்திப்பு:
மருது என்ன சொல்ல வருகிறார்?
மூட்டை துாக்கும் கூலித் தொழிலாளியின் கதை; அந்த தொழிலாளிக்கும், அவன் பாட்டிக்கும் இடையே இருக்கும் பாசம், குடும்ப உறவுகளை விளக்குவது தான் இந்த படத்தின் சிறப்பம்சம்.
படத்துக்காக மூட்டை எல்லாம் துாக்கிருக்கீங்க போலயே?
இந்த ரோல், எனக்கு ரொம்ப புதுசு. டிராயர் தெரிவது போல், லுங்கி கட்டி, கொக்கியை சொருகிட்டு, அலட்சியமாக நடந்து போறதெல்லாம், ரொம்ப புதுசு. லயோலா கல்லுாரியில் படித்த என்னை, ஒரு அசல், கிராமத்து இளைஞனாக மாற்றி காட்டியுள்ளார் இயக்குனர் முத்தையா.
மூட்டை துாக்கிய அனுபவம்?
எனக்கும், சூரிக்கும், 50 கிலோ மூட்டையை எப்படி லாவகமாக துாக்குவது என, இயக்குனர் சொல்லிக் கொடுத்தார். எனக்கு கழுத்து வலியே வந்து விட்டது.
ஸ்ரீதிவ்யாவுடன் நடித்த அனுபவம்?
இந்த படத்துக்காக, ஸ்ரீதிவ்யா, என்னை அடிச்சிருக்காங்க; மிரட்டியிருக்காங்க. இதில், ஸ்ரீதிவ்யா கேரக்டருக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கு.
ராதாரவிக்கு சவால் விடுவது போன்ற வசனங்கள் இருக்கே?
இந்த படத்துக்கு வசனம் எழுதியது நான் இல்லை; இயக்குனர் தான். முதல் நாள் ஷூட்டிங்கில், நானும், அவரும் எப்படி நடிக்கப் போகிறோம் என, அனைவரும் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால், எங்களுக்கு அந்த உணர்வே இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், இந்த வசனத்தை இப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என, அவரே சில வசனங்களை கூறினார்; ரொம்ப பெருந்தன்மையான மனிதர். நடிகர் சங்கத்தில் நிர்வாக ரீதியாக சில பிரச்னைகள் இருந்ததே தவிர, எங்கள் இருவருக்கும் இடையே, தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை.
தொடர்ந்து ஆக் ஷன் படங்களில் நடிப்பது ஏன்?
இப்போது, வேறு சில கதைக்களம் உடைய படங்களில் நடிக்கிறேன். கத்திச் சண்டை, துப்பறிவாளன் என, வித்தியாசமான கதைகள் உடைய படங்களில் நடிக்கிறேன். வில்லத்தனமான ரோலில் நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் நடிப்பேன்.
விளம்பரத்தை விரும்புகிறீர்கள் போலிருக்கிறதே?
மனதுக்கு நல்லது என பட்டால், அதை தாமதிக்கமால் உடனடியாக செய்ய வேண்டும் என்பது தான், என்னோட பாலிசி. அதைப் பற்றி எந்த கவலையும் பட மாட்டேன். என்னைப் பார்த்து, 10 பேர், சமூகத்துக்கு நல்லது செய்தால், அது, வரவேற்க வேண்டிய விஷயம் தானே.
அரசியல்வாதியாக ஆசைப்படுகிறீர்களா?
அரசியல், தப்பான விஷயம் இல்லை; அதுவும் ஒரு வகையான தொழில் தான். எம்.எல்.ஏ., - எம்.பி., வாங்கும் சம்பளத்தை விட, நடிகனாக அதிகம் சம்பாதிக்கிறேன். அவர்களை விட, முடிந்த அளவு, சேவை செய்கிறேன். எந்த கட்சியையும் சாராதவனாக, சமூகத்துக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.
என்னதான், சரத் கூட மல்லு கட்டினாலும், அவருக்கு மருமகனாக போறீங்கன்னு ஒரு செய்தி இருக்கே?
வரலட்சுமியை சின்ன வயதில் இருந்தே தெரியும். இரண்டு பேருக்கும் நீண்ட நாள் நட்பு இருக்கு. இப்போது எனக்கு திருமண ஆசையில்லை. நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது தான், இப்போதைய குறிக்கோள். 2018 ஜனவரி, 14ல், நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா. அதற்கு அடுத்த நாளே, என்னோட திருமண தேதியை பகிரங்கமாக அறிவிப்பேன்.