ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'சைஸ் ஜீரோ' படத்தில் நடித்ததற்காக தன்னுடைய உடல் எடையை அதிகமாக ஏற்றிய அனுஷ்கா மிகவும் குண்டாக மாறினார். அந்தப் படத்திற்காக அவர் அப்படி மாறினாலும் அதற்கான பலன் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது. இதனால் மற்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவதற்கும் அவருக்குப் பிரச்சனையாக இருந்தது. 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும் உடனடியாக கலந்து கொள்ள முடியாமல் போனது. ஏறக்குறைய ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் அனுஷ்கா பழைய தோற்றத்திற்குத் திரும்பியுள்ளாராம்.
முன்பை விட மிகவும் அழகாகவே இருக்கிறார் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அனுஷ்காவின் புதிய தோற்றத்தைப் பார்த்தவர்கள் தற்போது அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க முன் வந்திருக்கிறார்கள். அதில் சிரஞ்சீவியின் படமும் ஒன்று. மேலும் சில தெலுங்குப் படங்களில் அவரை நடிக்க வைக்கவும் அணுகியிருக்கிறார்கள்.
இதனிடையே, அனுஷ்கா 'பாகுபலி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முப்பது வயதைக் கடந்த பின்னும் அனுஷ்காவிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருப்பதைப் பார்த்து இருபது வயதைக் கடந்த நாயகிகள் கொஞ்சம் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அனுஷ்காவிற்கு அழகு திரும்பியதோடு அதிர்ஷ்டமும் திரும்பியிருக்கிறது.