பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள திரையுலகின் ஆக்சன் கிங் சுரேஷ்கோபி சமீபத்தில் பிஜேபி கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பியாக போருப்பெர்ருக்கொண்டார் அல்லவா..? அது அரசியல்வாதிகளை தாண்டி சினிமாவில் உள்ள சக கலைஞர்களின் கண்களையே உறுத்தி வருகிறது. அதன் அடையாளம் தான் இயக்குனர் கமல் மற்றும் வினயன் ஆகியோர் அவரது புதிய பதவி குறித்து மோசமாக விமர்சித்துள்ளது.. இதில் இயக்குனர் கமல் ஒருபடி மேலாக 'ராஜ்யசபா சீட்டை பெற்றதன் மூலம் சுரேஷ்கோபி நரேந்திரமோடியின் அடிமையாகவே ஆகிவிட்டார்” என காட்டமாக கருத்து கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு சுரேஷ்கோபி ஏதும் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டாலும் கூட அவரது ரசிகர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.. இயக்குனர் கமலுக்கு பதிலடி தர நினைத்தவர்கள், அவரது புகைப்படம் கொண்ட பிளக்ஸ் போர்டு ஒன்றை தயார்செய்து, கமலின் வீட்டின் முன்னால் அதை மாட்டிவிட்டனர். அடுத்ததாக அவர்கள் கமலின் படத்திற்கு செருப்புமாலை அணிவித்ததுதான் ஹைலைட். மேலும் அந்த பிளக்ஸ் போர்டில் 'தன்னைச்சுற்றியுள்ளவர்களுக்கு கூட எந்த உதவியும் செய்திராத கமலுக்கு, சமூகத்திற்காக பல வருடங்களாக பல நல்ல விஷயங்களை செய்துவரும் சுரேஷ்கோபியை பற்றி பேச அருகதை இல்லை” என்றும் வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இயக்குனர் கமலோ இதைப்பற்றியெல்லாம் தான் பொருட்படுத்த போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.