'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமானது சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டர். 1961ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் தூய உள்ளம். சிவாஜி நடித்த படங்கள் அனைத்தும் அங்குதான் திரையிடப்பட்டது. பாவமன்னிப்பு, திருவிளையாடல், வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்கள் இதில் வெள்ளி விழா கொண்டாடியது.
ரஜினி நடித்த சந்திரமுகி 888 நாட்கள் ஓடி சரித்திர சாதனை படைத்ததும் சாந்தி தியேட்டரில்தான். சென்னையில் முதல் ஏசி., வசதி கொண்ட தியேட்டரும் சாந்தி தான். திரையரங்கின் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் சாந்தி தியேட்டருக்குதான் வந்தது. முதல் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், 70எம்எம் திரை, டால்பி சவுண்ட் சிஸ்டம் எல்லாமே சாந்தி தியேட்டரில்தான் துவங்கியது. 2006ம் ஆண்டு சாய் சாந்தி என்கிற மினி தியேட்டரும் அமைக்கப்பட்டது.
55 ஆண்டுகள் கோடிக் கணக்கான மக்களை மகிழ்வித்த சாந்தி தியேட்டர் ரசிகர்களிடமிருந்து கடந்த 16ந் தேதி முதல் விடைபெற்றுக் கொண்டது. கடைசியாக சூர்யா நடித்த 24 படம் திரையிடப்பட்டது. 16ந் தேதி இரவு கடைசி காட்சி திரையிடப்பட்டது. அதனை சிவாஜி குடும்பத்தினர் அனைவரும் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்துவிட்டு கண்ணீரோடு வீடு திரும்பினர்.
சாந்தி தியேட்டர் இருந்த வளாகத்தில் சர்வதேச தரத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் 4 தியேட்டர்களும் வர இருக்கிறது. அந்த தியேட்டருக்கு சாந்தி, சாய் சாந்தி, சிவாஜி, பிரபு என பெயர் வைக்கப்படும் என தெரிகிறது.