வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கிருமி படத்தில் சவுந்தர பாண்டியன் என்றொரு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் நடித்தவர் டேவிட். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது தனுஷின் கொடி, சசிகுமாரின் கிடாரி, கார்த்தியின் காஷ்மோரா ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் டேவிட்.
தான் நடித்து வரும் கேரக்டர்கள் பற்றி டேவிட் கூறுகையில், கிருமி, கத்தி, அரிமா நம்பி, காக்கி சட்டை, மீகாமன், சகாப்தம், எனக்குள் ஒருவன், மாலை நேரத் துமயக்கம். தனிஒருவன் என பல படங்களில் நடித்துள்ள நான், தற்போது கொடி, கிடாரி, காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இதில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறேன். எம்.எல்.ஏ வேடம். இந்த படத்தைப்பற்றி சொல்ல வேண்டு மென்றால், தேசிய விருது பெற்ற நடிகர் தனுசுடன் நடித்தது பெருமையாக உள்ளது. எந்தவித பந்தாவும் இல்லாமல், எளிமையாக அவர் பேசிப்பழகியதை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் டைரக்டர் துரை செந்தில்குமாரும், ரொம்ப பொறுமையாக காட்சிகளை நடிகர் நடிகைகளுக்கு விளக்கி அருமையாக படமாக்கினார். அதனால் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. அதற்காக நடிகர் தனுஷ், டைரக்டர் துரை செந்தில்குமார் ஆகியோருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அந்த வகையில் கிருமிக்கு பிறகு ஒரு பெரிய பேனரில் நடித்த திருப்தி கிடைத்துள்ளது.
அதையடுத்து சசிகுமார் நடித்து வரும் கிடாரி படத்தில் பாம்பே செல்வம் என்றொரு நெகடீவ் வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தை வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் இயக்குகிறார். தேனி, கோயில்பட்டியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுதவிர காஷ்மோராவிலும் நடிக்கிறேன். ஆக, வித்தியாசமான கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். மேலும், என்னைப்பொறுத்தவரை இந்தமாதிரிதான் என்றில்லாமல் எந்தமாதிரியான கேரக்டர்களை கொடுத்தாலும் நடிப்பேன். எனது திறமைக்கு தீனி வேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கமாக உள்ளது. அதோடு, நான் கிருமி படத்தில் நடித்த பிறகு நிறைய போலீஸ் வேடங்கள் வந்தன. தொடர்ந்து அந்த மாதிரி நடித்தால் முத்திரை விழுந்து விடும் என்பதால் அதையடுத்து நான் போலீஸ் வேடங்களையே ஏற்கவில்லை. என் மீது எந்தவொரு முத்திரையும விழாத வகையில் படத்துக்குப்படம் வித்தியாசமான கேரக்டர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்கிறார் டேவிட்.