ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாபி சிம்ஹா நடித்த மீரா ஜாக்கிரதை படம் மே 27 அன்று வெளிவர இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு விளம்பரம் நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் சம்பந்தமாக நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சங்க தலைவருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக சில தினசரி நாளிதழ்களில் நான் யார் என்று கேள்விப்படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் மீரா ஜாக்கிரதை எனும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான உறுமீன் படத்தின் புகைப்படங்களை பயன்படுத்துகின்றனர். நான் மீரா ஜாக்கிரதை படத்தில் நடித்ததும் இல்லை டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகி என்று கூறப்படும் மோனிகா அவர்களை நான் நேரில் பார்த்ததும் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.
பாபி சிம்ஹாவின் இந்த புகார் பொய்யானது என்று தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பளம் பெற்று பாபிசிம்ஹா நடித்து வந்தகாலகட்டத்தில் நடித்த படம்தான் மீரா ஜாக்கிரதை. பைனான்ஸ் பிரச்சனையால் முடங்கிப்போன அந்தப் படத்தை தற்போது சிரமப்பட்டு வெளியிடும் முயற்சியில் உள்ளனர். இதை அறிந்த பாபி சிம்ஹா தனது இன்றைய சம்பளமான 50 லட்சத்தைக் கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு மீரா ஜாக்கிரதை படத்தின் தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால் தான் அந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை என்று பொய்யான புகாரை பாபி சிம்ஹா கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதேசமயம், அந்தப் படத்தில் பாபி சிம்ஹா நடித்ததற்கு ஆதாரமாக அப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளளனர் மீரா ஜாக்கிரதை படக்குழுவினர்.