தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தின் பின்னால் ஒளிந்துள்ள குற்றவாளிகள் யாரென்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.. இதனால் போலீஸார் சரியான கோணத்தில் விசாரிக்கவும் இல்லை, விசாரணையில் தீவிரம் காட்டவும் இல்லை என கலாபவன் மணியின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே கூறிவந்தனர்.. இந்தநிலையில் கலாபவன் மணியின் நினைவாக அவரது சொந்த ஊரில் முக்கியமான இடத்தில் நிறுவியிருந்த நினைவு விளக்கு ஒன்றை போலீஸார் அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலாபவன் மணியின் நினைவாக கலாபவன் மணி சாரிடபிள் ட்ரஸ்ட் மூலமாக ஒரு கண்ணாடி பெட்டியில் அவரது உருவப்படத்தை வைத்து விளக்கேற்றி வந்தனர் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் மாவட்ட கலெக்டர் அந்த விளக்கை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பிரச்சனை இல்லாத இடமாக பார்த்து வைக்குமாறு உத்தரவிட்டார்.. அவரிடம் உரிய கால அவகாசம் கேட்டு, அதற்கு அவர் சம்மதித்தும் இருந்த நிலையில் தான் போலீஸார் இந்த நினைவு விளக்கை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த விளக்கை மாற்றி வைக்க ஏற்பாடு செய்ய ஒருநாள் கூட அவகாசம் தராமல் போலீஸார் இப்படி அராஜகமாக நடந்து கொண்டதை கண்டித்து கலாபவன் மணியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.