இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்றைய தமிழ் இளைஞர்கள் மதுவில் மயங்கிக் கிடக்கிறார்களே என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் நடிகர் ராஜேஷ். மதுரையில் இளைஞர்கள் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசியபோதுதான் ராஜேஷ் இப்படி கூறியிருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மதங்கள் என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட்டுள்ள இன்றைய குடும்ப சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. திரைப்படம், அரசியல், பொது வாழ்வு போன்றவற்றில் குறிப்பிடும்படியான தலைவர்களான காமராஜர், கக்கன், லால்பகதூர் சாஸ்திரி, அண்ணாத்துரை, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் இன்று இல்லை. மாறாக லஞ்சம், ஊழல் நிறைந்த சமுதாயமாக தற்போது மாறியுள்ளது.
தொலைக்காட்சி, திரைப்படங்கள், உலகமயமாக்கல் போன்றவற்றாலும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு இன்றைய இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பழைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டு வருகிறார்கள். கலாச்சார சீரழிவுக்கு காரணமாக மனிதனின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் தற்போது மதுவுக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது. இதனால் இளைஞர்கள் சிந்திக்கும் சக்தியையே இழந்து காணப்படுகிறார்கள். வெறும் பரபரப்பை நம்புகிறார்கள். எனவே இதுபோன்ற சவால்களில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மதுவிலிருந்து மீள வேண்டும், என்றார்.