தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல குணசித்திர நடிகரும், மைம் கலைஞருமான மைம் கோபியின் மைம் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த நிதி, எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது:
மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழச்சி. தனக்கு கிடைக்கும் சினிமா புகழ் மூலமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி, நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன். சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும், நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .
நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன். இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம். கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார். தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும், இந்த குழுவினருக்கும் உண்டு என்று பேசினார் .
விழாவில் நடிகர் கிஷோர் இயக்குனர்கள் சுசீந்திரன், கரு பழனியப்பன், மகிழ் திருமேனி, பாலாஜி மோகன், சிவா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் காளி வெங்கட், சரவணன், பாண்டி, முரளி, ஆத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.