பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வளர்ந்து வரும் நடிகர் பாபிசிம்ஹா. அவர் நடித்துள்ள கோ 2 படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அடுத்து அவர் நடிப்பில் மீரா ஜாக்கிரதை என்ற படம் வெளிவர இருப்பதாக செய்திகளும், விளம்பரங்களும் வெளிவந்தது. இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் ம-னுவில் பாபிசிம்ஹா கூறியிருப்பதாவது:
நான் கடந்த 3 வருடங்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சில தினசரி நாளிதழ்களில் நான் யார் என்று கேள்விப்படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் மீரா ஜாக்கிரதை என்னும் படத்தில் நான் நடித்துள்ளதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான உறுமீன் படத்தின் ஸ்டில்களை பயன்படுத்துகிறார்கள்.
நான் மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் நடிக்கவே இல்லை. டப்பிங் பேசவுமில்லை. அந்த படத்தின் நாயகியாக கூறப்படும் மோனிகா என்பவரை நான் பார்த்ததுகூட இல்லை. எனபே என் பெயரை தவறாக பயன்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் பாபிசிம்ஹா மீரா ஜாக்கிரதை படத்தில் நடித்தது உண்மைதான் என்பதற்கான ஆதரமாக அவர் நடித்த ஸ்டில்களை படத் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.