அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஈட்டி படத்திற்கு பிறகு மருது, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ திற என 3 படங்களை கைவசம் வைத்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இதில் காஷ்மோரா படத்தில் நயன்தாராவும் நடித்திருப்பதால், அந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லையாம் ஸ்ரீதிவ்யா. ஆனால் விரைவில் வெளியாகியிருக்கும் விஷாலின் மருது மற்றும் ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற ஆகிய படங்களை எதிர்பார்க்கிறார். இதில் மருது படத்தில் மதுரைக்கார பெண்ணாக கலக்கி எடுத்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா.
ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போலவே இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, அடாவடித்தனமான பெண்ணாக நடித்துள்ளாராம். அதனால் இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கூறும் ஸ்ரீதிவ்யா, இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகயிருப்பதால், இதை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது மார்க்கெட் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தனது எதிர்பார்ப்பை கூறி வருகிறார்.