டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எதற்கு மாற்றம் தேவை, எல்லாமே நல்லாத்தான் இருக்கு என்று நடிகர் சிம்பு ஓட்டளித்த பின்னர் கூறினார். பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியிருந்த நடிகர் சிம்பு, ஒருவழியாக அந்த பிரச்னையிலிருந்து மீண்டு ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாடிய பாட்டு மூலம் மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதோடு தன் ஜனநாயக கடமையையும் முறைப்படி இன்று(மே16ம் தேதி) செலுத்தினார். சென்னை, திநகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் தனது ஓட்டை பதிவு செய்தார்.
ஓட்டுப்போட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ''எல்லோரும் ஓட்டுப்போடுங்க, ஓட்டுப்போடுவது நம் கடமை. எதற்கு மாற்றம் தேவை, எல்லாமே நல்லாத்தானே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், நல்லது நடந்தால் போதும், எல்லோரும் ஓட்டு போடுங்க என்றார்.