அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் சிவக்குமார் தன் மனைவி, மகன் கார்த்தி, மருமகளுடன் சென்னை, தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வரிசையில் நீன்று ஓட்டளித்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், ''வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறவர்கள் தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துங்க, உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாவது அமல்படுத்துங்க என்றார்.
கார்த்தி பேசும்போது... ''அப்பா சொன்னதை போல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துங்க. மழை பெய்கிறது என்று வீட்டில் இருந்துவிடாதீர்கள், தயவு செய்து எல்லோரும் வந்து ஓட்டுப்போடுங்க. மேலும் தமிழகத்தில் விவசாயம் மோசமாக உள்ளது. விவசாயத்தை மேம்படுத்துங்க, ஆட்சி அமைப்பவர்கள் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றார்.
இந்த தேர்தலில் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் ஓட்டளிக்கவில்லை. சொந்த விஷயம் காரணமாக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த தேர்தலில் ஓட்டுப்போட முடியாமல் போவதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.