'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டைரக்டர் ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்த சூர்யா, தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான எஸ்-3 படத்தில் நடித்து வருகிறார். முந்தைய இரண்டு சிங்கம் படங்களை விடவும் மிரட்டலான கதையில் நடித்து வரும் சூர்யா, முதலில் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப் பில் கலந்து கொண்டவர், பின்னர் காரைக்குடி, மலேசியா என சில லொகேசன் களில் நடந்த படப்பிடிப்பில் நடித்து வந்தார். ஆனால், விரைவில் எஸ்-3 பட யூனிட் மீண்டும் விசாகப்பட்டினத்துக்கு செல்லவிருக்கிறதாம்.
காரணம், அங்குள்ள ரயில்வே ஸ்டேசன் லொகேசனில் ஒரு பிரமாண்டமான சண்டை காட்சியை படமாக்கப்போகிறாராம் டைரக்டர் ஹரி. அந்த பகுதியில் ரயில்வே பிளாட்பாரம் அதிகமாக இருப்பதால் அங்கு ஒரு செட்டும் உருவாக்கப்படுகிறதாம். மேலும், ரயிலில் அந்த சண்டை காட்சியின் பெரும்பகுதி நடை பெறவிருப்பதால், ஒரு நாள் வாடகைக்கு ரயிலை புக் பண்ணப்போகிறார்களாம். என்னதான் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரயிலாக இருந்தபோதும், அதற்கான அனுமதியை டெல்லியில்தான் வாங்க வேண்டுமாம். அதனால் அதற்கான அனுமதி கடிதம் ஒன்றை டெல்லிக்கு அனுப்பி விட்டு, ரயிலில் படமாக்க அனுமதி கிடைக்கும் நாளை எதிர்பார்த்திருக்கிறார் டைரக்டர் ஹரி.