பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், அம்மாநில அழகியாகவும் தேர்வானவர். பின்னர் சில இந்தி சீரியல்களில் நடித்து விட்டு, தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அங்கு பல படங்களில் நடித்த பிறகு பிரம்மன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படத்தின் தோல்வி காரணமாக கோடம்பாக்கம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் மறுபடியும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கி வரும் மாயவன் படத்தில் யாருடா மகேஷ் படத்தில் நடித்த சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரம்மன் படத்தை விட இந்த படத்தில் லாவண்யா திரிபாதிக்கு அழுத்தமான கதாபாத்திரமாம். அதனால் இந்த படம் வெற்றியாக அமைந்தால் அடுத்து கோலிவுட்டில் முகாமிடவும் முடிவு செய்திருக்கிறார் லாவண்யா. இந்த சேதி தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.