'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து முதல் படமான பென்சில் 2 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்திருந்தார். இதனை கல்சன் மூவீஸ் சார்பில் எஸ்.வி.ராகவேஷ் தயாரித்திருந்தார். மணி நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று ஒரு புறம் பரபரத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதனால் தயாரிப்பாளர்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஜி.பி.பிரகாஷ்குமார் அங்கு புகார் மனு அளித்தார். “எங்கள் தயாரிப்பான பென்சில் படம் கடந்த 13ந் தேதி வெளிவந்தது. ஆனால் 14ந் தேதியே அதன் திருட்டு விசிடி விற்பனைக்கு வந்துவிட்டது. இணைய தளங்களிலும் வெளியாகி உள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தயவு செய்து இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டதோடு படம் வெளியான இணைய தள முகவரியையும் கொடுத்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த ஜி.வி.பிரகாஷ்குமார் இதே புகாரை விளக்கி கூறினார்.