ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், இந்திய ராணுவத்தின் லெப்டினட் கர்னல் பதவியில் இருக்கிறார். அவரது சேவைகளை பாராட்டி இந்திய ராணுவம் இந்த பதவியை அவருக்கு வழங்கி உள்ளது. ராணுவத்தில் பதவியில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதி.
ஆனால் அதை மீறி மோகன்லால் பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிடும் தனது நண்பரும், நடிகருமான கணேஷ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கணேஷ்குமார் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். மோகன்லால் தேர்தல் பிரச்சாரம் செய்ததன் மூலம் தனது பதவியை அவமானப்படுத்தி விட்டார். துஷ்பிரயோகம் செய்து விட்டார். அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில தேர்தல் கமிஷனரிடம் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குத்தில் சுரேஷ் புகார் கொடுத்துள்ளார். புகாரை தேர்தல் கமிஷன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
அதே போல நடிகர் சங்க உறுப்பினராக உள்ளவர்கள் அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது நடிகர் சங்க விதிமுறையாகும். அதையும் மோகன்லால் மீறிவிட்டார். அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் இன்னோசெண்ட் கூறும்போது “மோகன்லால் கணேஷ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.