பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள செயல்பாடு கடந்த சில வருடங்களில் அதிகமாகவே உள்ளது. ஒவ்வொருவராக அந்த வலைக்குள் விழுந்து கொண்டுதானிருக்கிறார்கள். தங்களது ரசிகர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிகிறது என்பது மட்டுமே அதில் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய சந்தோஷம். பொதுவாக சமூக வலைத்தளங்கள் என்றால் திரையுலக நட்சத்திரங்கள் டிவிட்டரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே ஃபேஸ்புக்கிலும் செயல்படுகிறார்கள்.
அந்த விதத்தில் ஃபேஸ்புக்கில் அதிக தொடர்பாளர்களைப் பெற்ற நடிகராக தனுஷ் மாறியுள்ளார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தொட்டுள்ளது, அதாவது 40 லட்சம் பேர் அவரைத் தொடர ஆரம்பித்துள்ளார்கள். கமல்ஹாசனைக் கூட 34 லட்சம் பேர்தான் தொடர்கிறார்கள். அவரையும் தாண்டி தனுஷ் சென்று கொண்டிருக்கிறார்.
தனுஷை ஏற்கெனவே டிவிட்டரில் 27 லட்சம் பேர் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக்கையும், டிவிட்டரையும் சேர்த்தால் தனுஷை சமூக வலைத்தளங்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தைத் தாண்டும். ஒரு தமிழ் நடிகருக்கு இந்த அளவிற்கு இருப்பது மிகப் பெரிய சாதனைதான்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன்தான் ஃபேஸ்புக்கில் முதலிடத்தில் உள்ளார். அவரை 1 கோடியே 7 லட்சத்திற்கம் மேற்பட்டவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை லட்சம் பேர் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்தாலே படம் வெற்றி பெற்றுவிடுமே. உதாரணமாக தனுஷைத் தொடரும் 67 லட்சம் பேரும் அவரது படத்தைப் பார்க்க வந்தால் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட 67 கோடி ரூபாய் வசூலாகிவிடும்.
அப்படியிருக்க 'தங்கமகன்' போன்ற படங்கள் ஏன் தோல்வியடைய வேண்டும். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை நம்பி தாங்கள் உச்சத்தில் இருப்பதாக சிலர் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்பது மட்டும் புரியும்.