பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் 24. இந்த படம் வெளியான அன்றே தமிழ்நாடு, ஆந்திரா, பெங்களூரில் உள்ள கடைவீதிகளில் திருட்டு விசிடி விற்பனைக்கு வந்து விட்டதாம். அதோடு முதல்நாளே இணையதளங்களிலும் அப்படம் வெளியானதாம். இந்த செய்தி அறிந்த படநாயகன் சூர்யா அதிர்ச்சியடைந்துள்ளாராம். அதையடுத்து அவரது ரசிகர் மன்றமும் சில முக்கிய வீதிகளில் இறங்கி திருட்டு விசிடி விற்பனையாளர்களை கண்டறியும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
இந்த நிலையில், சூர்யாவின் 24 படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா, இந்த திருட்டு விசிடி விற்பனையை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த திருட்டு விசிடியை ஒழிக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.