விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பாகுபலிக்குப்பிறகு படங்களை செலக்டீவாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் தமன்னா. குறிப்பாக, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகாவைத் தொடர்ந்து அவரைத்தேடியும் சில பிரபலமில்லாத நடிகர்களின் படவாய்ப்புகள் தேடிச் சென்றபோது, இந்த விளையாட்டுக்கு நான் வரல. நான் எப்போதுமே பெரிய நடிகர்களுடன்தான் ஜோடி போடுவேன். இறங்கி வந்தால் அப்புறம் உசரத்துக்கு போறது ரொம்ப கஷ்டமாகியிடும் என்று சொல்லி சில படங்களை திருப்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் விஜய்சேதுபதியுடன் தர்மதுரையில் நடித்த தமன்னாவுக்கு விஷாலின் புதிய படவய்ப்பும் கிடைத்துள்ளது. ஆக, இதன்பிறகு முதல் கிரேடு நடிகர்களின் படங்கள் தன்பக்கம் திரும்பவில்லையென்றால் செகண்ட் கிரேடு நடிகர்களுடனாவது இன்னொரு ரவுண்டு வருவோம் என்று முடிவு செய்துள்ள தமன்னா, சமீபத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும அழுது நடிக்கும் வேடங்களில நடிக்க மாட்டேன் என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார். ஆனால் இப்போது, அழுதுதான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் அழுத்தமான வேங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அதனால் வெறும் கலகலப்பு, கிளுகிளுப்புக்கு மட்டுமே என்னை தொட்டுக்கொள்ளாமல், அழுத்தம் கொடுக்கும் வேடங்கள் கொடுத்து வெயிட்டான கதாநாயகியாக மாற்றுங்கள் என்று சில அபிமான டைரக்டர்களின் காது கடித்து வருகிறார் தமன்னா.