வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறார் சவுந்தர் ராஜா. விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர். இப்போது நான் விஜய் சேதுபதி போல வளரணும் என்கிறார். அவர் கூறியதாவது:
எனக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. கிராமத்துல பெரிய பண்ணை குடும்பம். நான் படித்து பெரிய வேலை பார்க்கணும்னு பெரிய படிப்பு படிக்க வச்சாங்க, நானும் படிச்சு முடிச்சிட்டு வெளிநாட்டுல நல்ல வேலையில இருந்தேன். ஆனால் நடிப்பு ஆசை என்னை சென்னைக்கு துரத்திடுச்சி. காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் என்னோட ஸ்கூல்மெட் அவர்கூட சேர்ந்து சினிமா சான்ஸ் தேடினேன். அவரோட குறும்படங்கள்ல நடிச்சேன். அவர் மூலமா விஜய் சேதுபதி அறிமுகமானார். கூத்துப்பட்டறையில அவர் சேர்த்துவிட்டார். கூத்துப்பட்டறையில இருந்துகிட்டே டயலாக்கே இல்லாத சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சேன். சுந்தரபாண்டியன் அடையாளம் தெரியுற மாதிரி கேரக்டர் கிடைச்சுது. அப்படியே வளர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல பெரிய கேரக்டர் கிடைச்சுது.
இப்போது எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை படத்தில் கவுண்டமணி சாருடன் நடிச்சிருக்கேன். படத்துல நானும் ரித்விகாவும் மதுரை காதலர்கள் எங்கள் காதலை சேர்த்து வைக்கத்தான் மணி அண்ணன் போராடுவாரு. இப்போது மேலும் சில படங்கள்ல நடிக்கிறேன். விஜய்சேதுபதி அண்ணன் மாதிரி சிம்பிளான நடிகராக வளரணுங்றது என்னோட ஆசை. என்கிறார் சவுந்தர் ராஜா.