அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
இந்தியத் திரையுலகில் உச்ச இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் இளையராஜா. இவர் இசையமைக்க வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. சரியாக 40 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'அன்னக்கிளி' திரைப்படம் வெளிவந்தது. ஹிந்திப் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலக ரசிகர்களை நமது கிராமிய இசையின் பக்கம் திரும்ப வைத்து இன்று வரை ரசிகர்களை தமிழ் மண்ணின் இசையயைக் கேட்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
'அன்னக்கிளி'யில் ஆரம்பமான இவருடைய இசைப்பயணம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார். எண்ணற்ற பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள் என பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பலருக்கு இவருடைய இசையில் பாடிய பிறகுதான் ஒரு தனி அடையாளமே கிடைத்தது.
இவருடைய இசையாலேயே வெற்றி பெற்று வரலாறு படைத்த படங்களின் எண்ணிக்கை அதிகம். இவருடைய இசையாலேயே ஹீரோக்களாக வலம் வந்தவர்கள் நிறைய பேர். இவருடைய இசைதான் தங்களது படங்களுக்கு வேண்டுமென்று காத்திருந்து இசையமைத்த இயக்குனர்கள் பலர்.
கிராமிய இசையில் மட்டுமல்லாது கர்நாட இசை, மேற்கத்திய இசை என அனைத்து இசைகளையும் தன்னுடைய படங்களில் புகுத்தி இசை தெரியாத ரசிகர்களைக் கூட தன்னுடைய இசையால் மயக்கியவர்.
1000 படங்களைக் கடந்து இன்றும் பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் பிஸியான இசையமைப்பாளர். ஒரு படத்திற்கு சராசரி 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 5000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது உலகில் வேறு யாருமே படைத்திருக்க முடியாத ஒரு மாபெரும் சாதனைதான்.
இசை உள்ளவரைக்கும், தமிழ் உள்ளவரைக்கும் இளையராஜாவின் இசை இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.