ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏராளமான புத்தகங்களை எழுதியிருப்பவர் பிரபல எழுத்தாளார் பாலகுமாரன். அதோடு கே.பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தை இயக்கிய இவர், நாயகன், குணா, ஜென்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்பட பல படங்களுக்கு டயலாக் எழுதியுள்ளார். ஆனபோதும் சமீபகாலமாக அவர் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. மேலும், அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திற்கு பாலகுமாரன்தான் கதை வசனம் எழுதுவதாக ஒரு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்தை பாலகுமாரன் தனது மனைவியுடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது தான் எழுதிய சில புத்தகங்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அவர்களின் இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்ததாம். இந்த தகவலை தனது பேஸ்புக்கில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் பாலகுமாரன்.