தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உண்மையிலேயே பரபரப்பான செய்திதான் இது.. பின்னே மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் மலையாள நடிகர்சங்கமான 'அம்மா'வில் இருந்து தானே விலகி இருக்கிறார் என்பது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான். இவரது விலகலுக்கு சொந்தக்காரணம் என எதுவும் இல்லாததும் அதேசமயம் நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டித்தான் சங்கத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்பதும்தான் இங்கே கவனிக்கத்தக்கது..
பொதுவாக மலையாள சினிமாக்காரர்கள் முன்னெல்லாம் அரசியலில் இருந்து வெகு தூரம் ஒதுங்கித்தான் இருந்தார்கள்.. மக்களும் கூட அவர்களை நடிகர் என்கிற நிலையிலேயே இருக்க வைத்தார்கள். ஆனால் போகப்போக ஓரிரு நடிகர்கள் அரசியலில் நுழைந்து பதவிகளையும் பிடித்தார்கள்.. ஆனால் மலையாள நடிகர்சங்கமான 'அம்மா'வின் முக்கிய கொள்கையே நடிகர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதுதான். ஆனால் அதைமீறி கணேஷ்குமார், ஜெகதீஷ் போன்றவர்கள் தேர்தலில் எதிர் எதிராக நின்று போட்டியிடுவதுடன் பிரச்சாரத்தில் ஒருவருக்கொருவர் தங்களது பெர்ஷனல் விஷயங்களை குற்றம் சாட்டி சண்டையிடுவது நடிகர்களுக்கான பெயரையே கெடுப்பதாக சலீம்குமார் நினைக்கிறார்..
அதுமட்டுமல்ல, சங்கத்தின் துணைத்தலைவரான மோகன்லால், எம்.எல்.ஏ வேட்பாளராக போட்டியிடும் தனது நண்பர் கனேஷ்குமாருடன் பிரச்சார மேடையில் முன்பு கலந்துகொண்டதும் சலீம் குமாரை வேதனைப்படுத்தியுள்ளது.. விதிகளை வகுத்தவர்களே விதிகளை மீறுகிறார்களே என்கிற வருத்தத்தில் தான் இப்போது நடிகர்சங்கத்தில் இருந்து விலகும் முடிவை சலீம்குமார் எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.. ஆனால் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான இடவேள பாலு என்பவர் சலீம்குமார் சங்கத்தில் இருந்து விலகியது அவரது சொந்த காரணங்களுக்காகத்தான் என கூறியுள்ளார்.