டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் மற்றும் தெலுங்கை பொறுத்தவரை நடிகை சமந்தா ஏறுமுகத்தில் தான் இருக்கிறார். முன்னணி நடிகர்களின் படங்களாக வாய்ப்பு தேடிவருவதுடன், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் இரண்டாவது முறையும் கதாநாயகியாக நடித்தும் விட்டார்.. அந்த அளவுக்கு பிசியானவர் குறைவான சம்பளம் தரும் மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவாரா என்றால் நிச்சயம் சந்தேகம் தான். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் படங்களை தான் அவ்வப்போது பார்த்து வருவதாகவும், அவரது நடிப்பிற்கு தான் தீவிர ரசிகை என்றும் கூறிய சமந்தா, தற்போது தெலுங்கில் உருவாகிவரும் 'ஜனதா' கேரேஜ்' படத்தில் ஜோடியாக இல்லாவிட்டாலும் கூட, மோகன்லாலுடன் இணைந்து நடித்து தனது ஆசையை பூர்த்தி செய்துள்ளார்..
ஆனால் மலையாள இளம் நடிகர்களில் யாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சமந்தா நடிப்பார் என அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் டிக் அடித்தது துல்கர் சல்மானைத்தானாம். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்புவரை அந்த விருப்பம் இல்லாவிட்டாலும், மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் நடித்த 'ஓ காதல் கண்மணி' படத்தை பார்த்ததில் இருந்து துல்கர் மீது க்ரேஸியாக இருக்கிறாராம் சமந்தா.. சமீபத்தில் ஒரு ஆன்லைன் சாட்டிங்கின்போது ரசிகர்களிடம் இந்த தகவலை அவரே பகிர்ந்துகொண்டும் உள்ளார்.