ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து 'காக்கிச்சட்டை, வெள்ளக்காரத்துரை' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பென்சில், மருது படங்களில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக காஷ்மரோ உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். தற்போது அவர் விஷாலுடன் நடித்துள்ள மருது படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் விஷாலேயே தான் மிரட்டியதாக கூறியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... இதுவரை நான் நடித்து வந்த படங்கள் எல்லாம் சாப்ட்டான கேரக்டர்களாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அந்த பாதையிலிருந்து முற்றிலும் விலகி, மருது படத்தில் மதுரைக்கார பெண்ணாகவே வாழ்ந்துள்ளேன். இந்தப்படத்தில் நான் பாக்யலட்சுமி என்ற ரோலில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு நிறைய காட்சிகள் உள்ளது, நிறைய பேசியுள்ளேன். குறிப்பாக விஷாலேயே நான் மிரட்டியிருக்கிறேன். அந்தளவுக்கு என்னுடைய ரோல் பவர்புல்லானது. இதுபோன்ற ரோல் எல்லாம் பொதுவாக ஹீரோயின்களுக்கு அமையாது. எனக்கு அமைந்தது அதிர்ஷ்டம். இப்படியொரு வாய்ப்பை தந்த இயக்குநருக்கு நன்றி.
நான் கார்த்தி, விஷால் இருவருடனும் நடித்துள்ளேன். விஷாலை பொறுத்தமட்டில் செட்டில் எப்போதும் கலகலப்பாக இருப்பார், கார்த்தி அமைதியாக இருப்பார். அடுத்தப்படியாக ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ தெற என்ற படத்தில் நடிக்கிறேன். மருது படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. இந்தப்படம் நிச்சயம் என்னுடைய சினிமா வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார்.