ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எவ்வளவோ கதைகளைக் கேட்டும் திருப்தி வராமல் கடைசியில் ரீமேக் படத்தில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்தார். இப்படத்திற்கான பூஜையும் ஹைதராபாத்தில் எளிமையாக நடைபெற்றது.
படத்தின் நாயகியாக யாரை நடிக்க வைப்பது என்பதில் கொஞ்சம் குழப்பம் நீடித்து வந்தது. சிரஞ்சீவிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்றால் 30 வயதைக் கடந்த நாயகிககள்தான் சரியாக இருப்பார்கள் என்று வலை வீசித் தேடினார்கள். நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து அவரை அணுகினார்கள். அவரோ மூணு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார். ஹிந்தியிலும் தேடிப் பார்த்தும் திருப்தியாக இல்லையாம். கடைசியில் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள், அவரும் சரி என்று சொல்லியிருக்கிறார்.
சிரஞ்சீவியுடன் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை. ஆனால், 10 வருடங்களக்கு முன் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'ஸ்டாலின்' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். அனுஷ்கா, நயன்தாரா அளவிற்கு சம்பளம் கேட்கவில்லை என்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் முதல் ஆரம்பமாகிறது.