ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு பக்கம் நயன்தாராவின் கால்ஷீட் கேட்டு ஆந்திர ஹீரோக்கள் நடையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பை ஆரம்பித்த நடிகர்களோ எதற்கு நயன்தாராவை நடிக்க அழைத்தோம் என்று நொந்து போய் இருக்கிறார்களாம். தெலுங்கில் நயன்தாராவுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருடைய இமேஜ் பல மடங்கு கூடியது. சிரஞ்சீவி படம் வரை நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுப் பார்த்துவிட்டார்கள்.
எப்படியோ வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் 'பாபு பங்காரம்' என்ற படத்தில் நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கி படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால், நயன்தாரா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் தவிக்க வைத்திருக்கிறார். அவரின் இந்த பொறுப்பின்மையைப் பார்த்து சீனியர் ஹீரோவான வெங்கடேஷ் கடும் எரிச்சல் அடைந்தாராம். படத்தை முடித்து கோடை விடுமுறையிலேயே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், நயன்தாராவால் அடிக்கடி படப்பிடிப்பு தள்ளிப் போனதால் படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லையாம். இப்போது ஜுலையில் படத்தை வெளியிடலாம் என்று பார்த்தால் 'கபாலி' வருவதாகச் சொல்கிறார்களே, எப்படி படத்தை வெளியிடுவது என்று முழித்து வருகிறார்களாம். எல்லாம் நயன்தாராவால் வந்த வினை என 'பாபு பங்காரம்' குழுவினர் பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம்.