ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களுக்குப்பிறகு கவர்ச்சி நாயகியாக அவதாரமெடுத்தவர் அஞ்சலி. குறிப்பாக கலகலப்பு படத்தில் அவர் அயிட்டம் நடிகைகளுக்கு இணையாக இடுப்பை வளைத்து நொடித்து ஆடிய ஆட்டம் இளவட்ட ரசிகர்களின் இதயங்களை இடித்து நொறுக்கியது. அப்படியொரு அதிரடி ஆட்டம் போட்டார் அஞ்சலி. அவரை இப்போது இறைவிபடத்தில் கணுக்கால் கவர்ச்சிகூட காட்டாத அளவுக்கு கண்ணியமான வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த வேடம் குறித்து அஞ்சலி கூறுகையில், இதுவரை நான் நடிக்காத வேடம். என் இதயத்திற்கு மிக நெருக்கமான வேடம், அதோடு பெண்களை இறைவனுக்கு சமமாக வெளிப்படுத்தும் படம் என்றும் கூறி வருகிறார். ஆனபோதும் அந்த வேடம் குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் அந்த படத்தில் அஞ்சலி கற்பரக்கரசி வேடத்தில் நடித்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது. மதுரையை எரித்த கண்ணகியின் மறு அவதாரம் போன்று அஞ்சலியின் கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். படம் வெளியானால் தாய்குலங்கள் போற்றும் நாயகியாகி விடுவாராம் அஞ்சலி.