ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இதுநாள் வரை துல்கர் சல்மான் நடித்து வந்த படங்கள் அனைத்தும் அவரை ஒரு நகரத்து இளைஞனாகவே ரசிகர்களுக்கு அடையாளம் காட்டி வந்தன. ஆனால் நடிப்பு என வரும்போது அந்த ஏரியாவையும் கடந்து புதிய தளத்திற்குள் பயணித்தாக வேண்டும் என்பதை துல்கர் சல்மான் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதன் பயனாகத்தான் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் திருச்சூர்க்காரனாக நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும்.
'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டி பேசிய திருவனந்தபுரம் பாஷையை ரசிக்காதவர் கேரளாவில் பாக்கி இருக்கமாட்டார்கள். அதேபோலத்தான் 'ஆர்டினரி' படத்தில் பஸ் ட்ரைவராக நடித்த பிஜுமேனன் பாலக்காடு பாஷையில் பேசியதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பிஜுமேனனுக்கு பாராட்டுக்களையும் குவித்தது. தொடர்ந்து பிஜுமேனன் 'வெள்ளிமூங்கா' என்ற படத்தில் காஞ்சிரப்பள்ளி பாஷையிலும் பேசி நடித்தார். 'ஜமுனா பியாரி' படத்தில் குஞ்சாக்கோவும், 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தில் ஜெயசூர்யாவும் திருச்சூர்காரனாக வெளுத்து கட்டியிருந்தார்கள்.. அவ்வளவு ஏன் 'பிரஞ்சியேட்டன் தி செயின்ட்' படத்தில் மம்முட்டியே திருச்சூர் பாஷை தானே பேசியிருந்தார். தந்தையை பின்பற்றி இப்போது திருச்சூர்காரனாக மாறுவது துல்கர் சல்மானின் முறை.