நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
முக்கியஸ்தர்களின் இயற்கை மரணங்களே பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அவர்களது மரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்திருந்தால்..? கலாபவன் மணியின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அவர் மரணம் இயற்கையானது அல்ல என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் அதிகம்... ஆனால் கேரள மாநிலத்தை சட்டமன்ற தேர்தல், ஜிஷாவின் கொடூர மரணம் என அடுத்தடுத்து ஆக்கிரமித்துக்கொன்டத்தில் கலாபவன் மரணமும் அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற கோஷமும் கிட்டத்தட்ட தேய்ந்துதான் போய்விட்டன.
ஆனால் கலாபவன் மணியின் குடும்பத்தார் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட தயாரில்லை.. குறிப்பாக கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் தனது அண்ணன் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று கூறியுள்ளார். மணியின் நண்பர்கள் என்கிற பெயரில் அவரைச்சுற்றி இருந்துகொண்டு, அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு, திருப்பிக்கேட்டபோது திருப்பித்தர தயாராக இல்லாத சிலர் தான் மணியை திட்டமிட்டு விஷம் கொடுத்து கொன்றுள்ளனர் எனவும் பகீர் குற்றச்சாட்டை தெரியப்படுத்தினார்.
போலீஸார் கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், மீறி அவர்களை வற்புறுத்தினால் தங்களையே மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதுதவிர இன்னும் முகம் தெரியாத சிலர் போனில் இந்த விவகாரத்தை கைவிடுங்கள் என மிரட்டுகின்றனராம். மலையாள சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலாபவன் மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தியதோடு சரி.. அதன்பின் பெரிதாக அழுத்தம் கொடுக்காததும் வழக்கு முன்னோக்கி நகராததற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.