இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இயக்குநர் பாலாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கஞ்சா கருப்பு. தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி காமெடி நடிகராக வந்தவர், படதயாரிப்பு, ஹீரோ ரோல் என்று திசை மாறியதால் அவரது காமெடி மார்க்கெட் ஆட்டம் கண்டது. இருப்பினும் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் எந்த அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத கஞ்சா கருப்பு, சுயேட்சை வேட்பாளர் முத்துமணிக்காக நமாக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது...
பல கட்சிகள் என்னை அரசியலுக்கு அழைத்தனர், ஆனால் சில காரணங்களால் ஒதுங்கிவிட்டேன். நான் சரியாக படிக்காததால் என்னை பலரும் ஏமாற்றிவிட்டனர். நான் எந்த கட்சியிலாவது சேர வேண்டும் என்றால் ஒரு நான்கு நாள் என்னிடம் முதல்வர் பதவியை கொடுத்து பாருங்கள், நதிகளை இணைப்பேன், கல்வியை முழுக்க இலவசமாக வழங்குவேன், பள்ளியில் மதிய உணவுக்கு மாணவர்களுக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இதை நகைச்சுவைக்காக சொல்லவில்லை, நிஜமாகவே செய்வேன். மாற்றம் வர வேண்டும் என்றால் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் நான் அவரது கட்சியில் சேருவேன்.
இவ்வாறு கஞ்சா கருப்பு கூறினார்.