தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
என்னமோ நடக்குது படத்தை வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் அண்ணாச்சியின் இளைய மகன் வினோத்குமார் தயாரிக்க, அண்ணன் விஜய் வசந்த் நடித்தார். அதில் மகிமா ஹீரோயின். ராஜபாண்டி இயக்கினார். இப்போது அதே டீம் அச்சமின்றி என்ற படத்தை தயாரிக்கிறது. ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. சரண்யாவுக்கு அதே அம்மா வேடம். சமுத்திரகனி சமூக போராளியாகவும், ராதாரவி கல்வி அமைச்சராகவும், ரோகினி சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கருணாஸ், பரத்ரெட்டி, நித்யா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரேம்ஜி இசை அமைக்கிறார்.
இந்தப் படம் கல்வியின் பெயரால் நடத்தப்படுகின்ற முறைகேடுகள், மோசடிகளை சொல்லும் படம். பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். கல்விக்கூடங்கள் மாணவர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை போதனையாக சொல்லாமல் யதார்த்தமான வாழ்க்கையோடு சொல்கிற கதை. சமூக அக்கறையுடன் உருவாகி இருக்கிறது. படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீசரை வருகிற 13ந் தேதி விஷால் வெளியிடுகிறார். என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.