டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது என ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என பயணித்து வரும் ஷாரூக், சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது....
டில்லியில் இருந்து வந்த நான் அடித்தட்டு வாழ்க்கை வாழ்ந்துள்ளேன், பெற்றோரின் துணையின்றி கையில் இருந்த பணத்துடன் மும்பைக்கு ஓடோடி வந்து வாழ்க்கை நடத்தினேன். ஆரம்பகாலத்தில் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த நிலையை அடைந்தேன். வாழ்க்கையில் சில விஷயங்களில் தோற்றுள்ளேன், ஆனாலும் அதிக உழைப்பை கொடுத்து வருகிறேன்.
ஒருபோதும் நான் என்னுடைய வெற்றியை கொண்டாடியது கிடையாது. ஒரே பேண்ட்டை தொடர்ச்சியாக ஒருவாரம் கூட அணிவேன். என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவேற்றுவேன். படங்கள் தயாரிக்கத்தான் நான் அதிகம் செலவு செய்வேன், எனக்கென்று எதுவும் செய்யமாட்டேன். சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் கூட வெளியே ஹோட்டலுக்கு எல்லாம் சென்று உண்ண மாட்டேன், வீட்டில் தான் பெரும்பாலும் உண்பேன். நம்முடைய வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம், அதற்குள் ஏதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.