தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேசம் முரளி என்பவர் இயக்கி, நடிக்கும் படம் கொள்ளிடம். ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த தூதியா நடிக்கிறார். இவர்கள் தவிர வடிவுக்கரசி, ராசிக், வேல்முருகன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இது நரிக்குறவர்களின் வாழ்க்கையை சொல்லும் படம். இதுகுறித்து இயக்குனர் நேசம் முரளி கூறியதாவது:
அழகில்லாதவர்கள் காதலிக்கவே கூடாதா? என்பதுதான் படம் முன் வைக்கும் கேள்வி. கதையின் நாயகி நரிக்குறவ சமுதாய பெண் என்பதால் அவர் வழியாக நரிக்குறவர்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன். சத்ரபதி சிவாஜிக்கு விசுவாசமாக இருந்த இனம் நரிக்குறவர்கள் இனம். இவர்கள் தென்னிந்தியா முழுக்க பரவியபோது எந்த மாநிலத்தில் குடியேறினார்களோ அந்த மாநில மொழியை மராட்டிய மொழி கலந்து பேசினார்கள். தமிழ் நாட்டில் மட்டும் தனித்த மொழி பேசுகிறார்கள். நாகரீகம் வளர்ந்த போதும் அவர்கள் இன்னும் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். குழுக்களாக வாழ்கிறார்கள். வேட்டை குணம் மறையவில்லை. இப்படி பல விஷயங்களுடன் அவர்கள் வாழ்வை பதிவு செய்திருக்கிறேன்.
அழுக்கான ஒருவன் வேடத்தில் யாரும் நடிக்க முன் வராததால் நானே நடித்தேன். பொதுவாக நரிகுறவ சமுதாய பெண்கள் அழகானவர்கள். ஹீரோயின் லூதியா அதற்கு ஏற்றார் போல் இருந்ததால் அவரை நடிக்க வைத்திருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் நேசம் முரளி.