பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படத்துக்கு பிறகு விஜய் மில்லடன் சொந்தமாக தயாரித்து இயக்கும் படத்திற்கு கடுகு என்று பெயர் வைத்துள்ளார். இதில் தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனும், பரத்தும் நடிக்கிறார்கள். குற்றம் கடிதல் படத்தில் நடித்த ராதிகலீ, ராஜகுமாரன் ஜோடியாகவும், புதுமுகம் சுபிட்சா பரத் ஜோடியாகவும் நடிக்கிறார்கள்.
ராஜகுமாரன் புலிவேஷமிட்டு ஆடும் கலைஞர். அப்பாவி, நல்லவர். பரத் நல்ல காரியத்துக்காக சண்டைபோடும் சண்டியர். இவர்கள் இருவருக்கும் ஒரு இடத்தில் மோதல் வந்து விடுகிறது. புலி வேஷம் போடுகிற ராஜகுமாரன் புலியாக மாறி பரத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார். இருவரின் மோதல்தான் படத்தின் கதை. படத்திற்கு பின்னணி இசை, பாடல்கள் கிடையாது என்கிற புதிய முயற்சியினை கையாண்டிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தரங்கம்பாடியில் 45 நாட்கள் நடந்தது. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் சென்னை அருகில் உள்ள அகரத்தில் அமைக்கப்பட்டு வரும் குத்துச் சண்டை செட்டில் நடக்கிறது. படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.