திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சமீபத்தில் வெளியான '24' படத்தையும் சேர்த்து சமீபத்தில் தான் இயக்கிய சில படங்களின் மூலம் மிக முக்கியமான இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் விக்ரம் கே.குமார்.. தெலுங்கில் அதிசயத்திலும் அதிசயமாக நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து சாதனை படைத்த விக்ரம் கே.குமாரின் லட்சியம் என்ன தெரியுமா..? மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்குவது தான்.. இதை விக்ரம் கே.குமாரே சமீபத்தில் ஒரு பேட்டியின்போது தெரியப்படுத்தியுள்ளார்..
விக்ரம் கே.குமாரின் பூர்வீகம் கேரள மாநிலம் திருச்சூர் என்பதால் மோகன்லாலை தனது ஆதர்ச நாயகர் என்று சொல்கிறாரோ என சந்தேகப்படவேண்டாம்.. பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக தான் வேலைபார்த்த இருந்த காலத்தில் இருந்தே மோகன்லாலை அருகில் இருந்து அணு அணுவாக ரசித்தவர்.. ஆனாலும் அருகில் சென்று அதிகம் பேசுவதற்கு தயக்கம் காட்டி ஒதுங்கி நின்றவர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல மோகன்லால் நடித்த 'கிலுக்கம்' படத்தை கிட்டத்தட்ட 100 முறையாவது பார்த்திருப்பாராம்.. அந்த அளவுக்கு மோகன்லாலின் தீவிர ரசிகரான விக்ரம் கே.குமார் விரைவில் மோகன்லால் படத்தை இயக்குவார் என்கிற அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருப்போம்.